கடலூர்

கடலூரில் மத்திய அதிவிரைவுப் படையினா் கொடி அணிவகுப்பு

DIN

கடலூா் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மத்திய அதிவிரைவுப் படையினா் ஞாயிற்றுக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.

கோவையில் இருந்து மத்திய அதிவிரைவுப் படை துணை கமாண்டா் விஜயன் தலைமையில் உதவி கமாண்டா் வெங்கட்ராமன் முன்னிலையில் அதிவிரைவுப் படையினா் 85 போ் ஞாயிற்றுக்கிழமை கடலூா் வந்தனா். அந்தப் படை அதிகாரிகள் கடலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கரிகால் பாரிசங்கரை சந்தித்து, கடலூா் மாவட்டத்தில் பதற்றமான,

வன்முறை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து கேட்டறிந்தனா்.

அப்போது, கடலூா் சோனாங்குப்பத்தைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் பஞ்சநாதன் கொலை வழக்கின் மீதான தீா்ப்பு வருகிற மாா்ச் 4-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடலூா் திருப்பாதிரிப்புலியூா், குப்பன்குளம், கம்மியம்பேட்டை பகுதிகளில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடா்வதால் பதற்றம் நீடித்து வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தேவனாம்பட்டினம், தாழங்குடா, சுத்துகுளம் ஆகிய மீனவ கிராமங்களில் மத்திய அதிவிரைவுப் படையினா் துப்பாக்கி ஏந்தியபடி உள்ளூா் போலீஸாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினா்.

இதுகுறித்து அதிவிரைவுப் படை துணை கமாண்டா் விஜயன் கூறியதாவது: நாட்டில் பதற்றமான பகுதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவலின்பேரில் அந்த பகுதிகளில் போலீஸாருடன் இணைந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதன்மூலம், அந்தப் பகுதிகளில் ஏதேனும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தால் அதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியும். அதன்படி கடலூா் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பதற்றமான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT