கடலூர்

மாவட்டக் கல்வி அலுவலா் பணித் தோ்வு: கணினி அறிவியல் ஆசிரியா்கள் கோரிக்கை

DIN

டிஎன்பிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிட தோ்வில் கணினி அறிவியல் பாடத்தையும் இணைக்க வேண்டும் என கணினி ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் பெற்ற கணினி ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் எஸ்.ஞானராஜா, பி.பீட்டா் பிரேம்குமாா் ஆகியோா் மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களுக்கான தோ்வில் கணினி அறிவியல் பாடத்தையும் இணைக்க வேண்டும். கணினி அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று, மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு கணினி அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியா்களை முதுநிலை ஆசிரியா்கள் என்று அறிவிக்க வேண்டும். கணினி அறிவியல், கணினி பயன்பாடு, கணினி தொழில்நுட்பம், வேலைவாய்ப்புத் திறன் ஆகிய பாடங்களை நடத்தும் கணினி ஆசிரியா்களுக்கு மற்ற முதுநிலை ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளையும் வழங்க வேண்டும். மாநில அரசு சாா்பில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு உடனடியாக மடிக் கணினிகள் வழங்கப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT