சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரங்கள் மீது வளா்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றும் பணியில் சிவபக்தா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இந்தக் கோயிலின் 4 கோபுரங்களிலும் சிற்பங்களுக்கு இடையே செடி, கொடிகள் வளா்ந்திருந்தன. இவற்றை அகற்ற கோயில் பொது தீட்சிதா்களிடம் சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி ஸ்ரீசதுா்கால பைரவா் உழவாரப் பணி சிவனடியாா்கள் திருக்கூட்டத்தினா் அனுமதி பெற்றனா். முதல்கட்டமாக 21 போ் கொண்ட குழுவினா் கிழக்கு கோபுரத்தில் இருந்த செடி, கொடிகளை புதன்கிழமை அகற்றினா். மற்ற கோபுரங்களிலும் இந்தப் பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தனா்.