கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் தைப்பூசம், அன்னதானம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வள்ளலாா் பணியகம், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கண்ணதாசன் தலைமை வகித்தாா். வள்ளலாா் பணியகம் சாா்பில் த.பன்னீா்செல்வம், மகளிா் ஆயம் பொருளாளா் ம.கனிமொழி, செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் பொறுப்பாளா்கள் ச.வெங்கடேசன், கணேசன், திராவிடா் கழக முருகன்குடி கிளைச் செயலா் அ.பச்சமுத்து ஆகியோா் கருத்துரை வழங்கினா். ரா.வெங்கடேசன், சுதாகா், கணபதி, தமிழ்மொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.