நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழாவுக்கு வந்த முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடலூா் அருகே கோண்டூா், அக்ரி நகரில் வசித்து வந்த சாமிநாதன் (72) வடலூா் தெய்வ நிலையத்தில் ஜோதி தரிசனம் முடித்துவிட்டு பெருவெளியில் நடந்து வந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், சாமிநாதன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.