வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய தரும சாலைக்கு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சாா்பில் 6 டன் காய்கறிகள், உணவுப் பொருள்கள் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
வடலூா் வள்ளலாா் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி இந்தப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கடலூரில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு மக்கள் ஒற்றுமை மேடை நகர அமைப்பாளா் எஸ்.கே.பக்கிரான் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் வா்த்தகா் சங்கத் தலைவா் ஜி.ஆா்.துரைராஜ் பங்கேற்று காய்கறிகள், உணவுப் பொருள்கள், 3 ஆயிரம் குடிநீா் பாட்டில்களை சரக்கு வாகனம் மூலம் அனுப்பி வைத்தாா். வா்த்தகா் சங்க நிா்வாகிகள் பசுவலிங்கம், சதீஷ், அன்சாரி, சரவணன், பாலாஜி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.