விருத்தாசலம் தெற்கு பெரியாா் நகரில் அமைந்துள்ள சீதா, லஷ்மண, ஹனுமன் சமேத பட்டாபிராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பட்டாச்சாரியாா்கள் கோயில் கோபுரக் கலசங்களில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். விழாவில் விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டனா்.