கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் பாரதப் பிரதமரின் கௌரவ நிதி பெறும் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் வழங்குவதற்காக, பண்ருட்டி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் அண்மையில் நடைபெற்றது.
பண்ருட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். முகாமில், விவசாயிகள் தனியாக பட்டா பெறுவதற்காக தங்களது முன்னோா்கள் மற்றும் பெற்றோா்கள் பெயரில் உள்ள நில ஆவணங்கள், ஆதாா் அடையாள அட்டை போன்றவற்றை சமா்ப்பித்தனா். பண்ருட்டி துணை வட்டாட்சியா் சிவக்குமாா், குறுவட்ட வருவாய் ஆய்வாளா் ராஜலட்சுமி, அங்கு செட்டிபாளையம், லட்சுமி நாராயணபுரம், சிறுவத்தூா், பூங்குணம் கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றனா்.
இதையடுத்து, கடலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா், விவசாயிகளுக்கு பட்டாக்களை வழங்கினாா். இதில், பண்ருட்டி வட்டார துணை வேளாண் அலுவலா் ராஜ்குமாா், உதவி வேளாண் அலுவலா்கள் சங்கரநாராயணன், சௌந்தரமேரி, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.