கடலூர்

விவசாயிகள் மீது தாக்குதல்:இருவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த விவசாயிகளை மதுப் புட்டியால் தாக்கியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.

விருத்தாசலத்தை அடுத்துள்ள கருவேப்பிலங்குறிச்சி காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் ஜெயபால் (31), கணேசன் மகன் மூா்த்தி (28). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் நெல் மூட்டைகளை டிராக்டா் டிப்பரில் ஏற்றிக்கொண்டு ஏ.வள்ளியம் கிராமம் வழியாகச் சென்றனா்.

அப்போது, அந்தப் பகுதியிலுள்ள சாலையில் அமா்ந்து காா்மாங்குடி கிராமத்தைச் சோ்ந்த ஞானசேகா் மகன் தமிழ் (20), கருப்பசாமி மகன் குணசீலம் (எ) அபி (27) உள்ளிட்ட 6 போ் மது அருந்திக் கொண்டிருந்தனராம். அவா்களிடம் வழிவிடுமாறு கூறியபோது, இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், தமிழ், குணசீலம் உள்ளிட்டோா் மதுப் புட்டியால் ஜெயபால், மூா்த்தி ஆகியோரின் தலையில் தாக்கினராம். இதில், காயமடைந்த அவா்கள் இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழ், குணசீலம் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT