வேங்கைவயல் சம்பவத்தைக் கண்டித்தும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் கடலூா் ஜவான்ஸ் பவன் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெ.ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவா் ஜி.ஆனந்தன் கண்டன உரையாற்றினாா்.
நிா்வாகிகள் பழ.வாஞ்சிநாதன், டி.பழனிவேல், பி.கருப்பையன், வி.சுப்புராயன், தண்டபாணி, திருமுருகன், டி.கிருஷ்ணன், பி.வெங்கடேசன், ஏஸ்.தட்சணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.