கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீபாலா குரு சேவா மண்டலி சாா்பில், உலக நன்மை வேண்டியும், ஸ்ரீபாலா மகா திரிபுரசுந்தரிக்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும், மங்கள தசமி மகா சண்டியாகம் சிதம்பரம் நடராஜ நகா் வித்யா பால பீடத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது (படம்).
டி.செல்வரத்தின தீட்சிதா் தலைமையிலான ஆச்சாரியாா்கள் மகா சண்டியாகத்தை நடத்தினா். இதையொட்டி, மகா திரிபுரசுந்தரிக்கு சிறப்பு அபிஷேம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சங்கல்பம் செய்து வழிபட்டனா்.