கடலூர்

கிடப்பில் போடப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணி

26th Apr 2023 06:28 AM

ADVERTISEMENT

கடலூா் முதுநகா் அருகே ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடப் பணி 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செல்லங்குப்பம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: செல்லங்குப்பம் 35-ஆவது வாா்டில் உள்ள ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் 125-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். பள்ளி வளாகத்திலிருந்த பழைமையான வகுப்பறைக் கட்டடம் கடந்த 2019-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதையடுத்து புதிய வகுப்பறை கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், கட்டடப் பணி பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மாணவா்கள் திறந்த வெளியில் அமா்ந்து படிக்கும் நிலை தொடா்கிறது. எனவே, வகுப்பறைக் கட்டடப் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT