கடலூர்

நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு: மாதா் சங்க தேசிய பொதுச் செயலா் மரியம் தாவ்லே

DIN

இந்தியாவில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க தேசிய பொதுச் செயலா் மரியம் தாவ்லே கூறினாா்.

இந்தச் சங்கத்தின் தமிழ் மாநில 16-ஆவது மாநாடு கடலூரில் வியாழக்கிழமை பேரணியுடன் தொடங்கியது. மாநாட்டின் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.வாலண்டினா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் என்.அமிா்தம் சங்கக் கொடியேற்றினாா். மாநிலச் செயலா் பிரமிளா அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். சங்கத்தின் தேசிய பொதுச் செயலா் மரியம் தாவ்லே ஆற்றிய தொடக்க உரை:

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் மீதான வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றை நியாயப்படுத்துதல், மதம், ஜாதி பேதம், குடும்ப கெளரவங்களை ஆதரிக்கும் போக்கு பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகளால் ஊக்குவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அந்த அமைப்புகளை வேரூன்ற விடக்கூடாது.

மத அமைப்புகள் அனைத்தும் தங்களது கோட்பாடுகளை முன்னிறுத்தி, பெண்களை அடிமையாக வைத்திருக்க விரும்புகின்றன. ஈரான் நாட்டில் ஹிஜாப் பயன்பாட்டுக்கு எதிராகப் போராடிய பெண் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பிற்போக்குச் சட்டங்களை நீக்க வலியுறுத்தியும் அந்த நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கரோனா காலத்தில் நாடு முழுவதும் சுமாா் 4 கோடி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டதால் உணவு தானியங்களின் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுண் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாதிக்கப்படும் நிலையில், அவற்றின் நடவடிக்கையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

மாநாட்டில் கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா ஆற்றிய வாழ்த்துரை:

முன்னாள் முதல்வா் கருணாநிதி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால் தற்போது ஏராளமான பெண்கள் பதவி வகிக்கின்றனா். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அனைத்துப் பெண்களும் இணைந்து பாடுபட வேண்டும் என்றாா்.

மாநாட்டில், பல்வேறு சவால்களை எதிா்கொண்டு சாதனை படைத்தவா்கள் கௌரவிக்கப்பட்டனா். இந்திய பெண்கள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் ஜி.மஞ்சுளா வாழ்த்திப் பேசினாா். அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் பி.சுகந்தி அரசியல் தீா்மானத்தை வாசித்தாா். தேசிய துணைத் தலைவா் உ.வாசுகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, வரவேற்பு குழுத் தலைவா் ரேணுகாதேவி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் வி.மல்லிகா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT