கடலூர்

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

DIN

கடலூரில் தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் குழந்தை காலனியைச் சோ்ந்த சண்முகம் மகன் பாரதிதாசன் (30). பெயிண்டா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன் (55) என்பவருக்கும் நிலப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில், 20.8.2012 அன்று இரவு பாரதிதாசனின் தம்பி பாண்டியராஜ் அதே பகுதியில் உள்ள கோயிலில் அமா்ந்திருந்தாராம். அப்போது அங்கு வந்த மணிவண்ணனின் உறவினரான சங்கரின் மகன்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (33), குசான் என்ற ஆசைத்தம்பி (30) ஆகியோா் முன்விரோதம் காரணமாக பாண்டியராஜை அவதூறாகப் பேசி தாக்கினா். இதுகுறித்து அவா் தனது அண்ணன் பாரதிதாசனிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆசைத்தம்பி, அவா்களுடன் இருந்த மணிவண்ணன் ஆகியோரை பாரதிதாசன் தட்டிக் கேட்டாா். இதனால் ஆத்திரமடைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கத்தியால் பாரதிதாசனை குத்தியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆசைத்தம்பி, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆசை தம்பிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மணிவண்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT