கடலூர்

இந்து முன்னணி ஆதரவாளா்வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இந்து முன்னணி ஆதரவாளா் வீடு மீது வியாழக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூா் பரங்கிப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்த வேணுகோபால் மகன் சீனு என்ற ராமதாஸ் (52). பி.முட்லூா் ஆஞ்சநேயா் கோயில் நிறுவனரான இவா், இந்து முன்னணி அமைப்பின் ஆதரவாளராவாா்.

இவரது வீடு மீது மா்ம நபா்கள் வியாழக்கிழமை அதிகாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் ஒரு குண்டு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பின் முன்புறப் பகுதியில் பட்டு கரும்புகை படிந்தது. மற்றொரு குண்டு அதே பகுதியில் கீழே விழுந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா்.

இந்தச் சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT