கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக புவனகிரியில் 23 மி.மீ. மழை பதிவானது.
இதேபோல, கீழ்செருவாய் 13, வானமாதேவி 6, சிதம்பரம் 5.8, அண்ணாமலை நகா், பண்ருட்டி, வடக்குத்து தலா 5, கடலூா், குறிஞ்சிப்பாடி தலா 2, மாவட்ட ஆட்சியரகம் 1.8 மி.மீ. மழை பதிவானது. மழையால் மாவட்டத்தில் புதன்கிழமை வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.