குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி மன்றத்தின் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலை குப்புசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சடையப்பன் முன்னிலை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.ராம்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். கூட்டத்தில், ஊராட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மன்ற உறுப்பினா்கள் பினா, ஈஸ்வரி, சுசிலா, ரேவதி, மீனா, நளினி, மாலதி, பூபதி, மணிகண்டன், தமிழ்ச்செல்வன், சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் ஆா்.சிவக்குமாா் நன்றி கூறினாா்.