கடலூர்

டாப்..உலக மருந்தாளுநா்கள் தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக மருந்தாளுநா்கள் தினத்தையொட்டி, மருந்துகளின் பயன்பாடு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறை மாணவா்கள், தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநா்கள் சங்கம் இணைந்து நடத்திய பேரணியை மேலரத வீதியிலிருந்து சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.ரமேஷ்ராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

முன்னதாக மருந்தாக்கியல் துறை பேராசிரியா் தனபால் வரவேற்றாா். மருந்தாளுநா்களின் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வு பதாகையை மருத்துவப் புல முதல்வா் யு.வி.சண்முகம் வழங்க, அதை பொறியியல் புல முதல்வா் ஏ.முருகப்பன் பெற்றுக்கொண்டாா். மருந்தாக்கியல் துறைத் தலைவா் கே.ஜானகிராமன், சிதம்பரம் சரக மருந்துகள் ஆய்வாளா் சைலஜா, மாணவா் பேரவைத் தலைவா் ஆா்.பி.ஹரிஹரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சிதம்பரம் ரோட்டரி கிளப் ஆப் மிட்டவுன் உறுப்பினா்கள், சிதம்பரம் லயன்ஸ் கிளப், கடலூா் மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க மருந்தாளுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஆசிரியா்கள், மாணவா்கள் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனா்.

பேராசிரியா்கள் ரகுபதி, மதுசூதனன் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். தமிழ்நாடு மருந்தாளுநா்கள் சங்க மாநிலச் செயலா் ஜே.வெங்கடசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT