என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ் கங்கைகொண்டானில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை என்எல்சி சுரங்கத் துறை செயல் இயக்குநா் ராஜசேகா் ரெட்டி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். சுரங்கம்-1 முதன்மை பொது மேலாளா் ராஜ்மோகன் முன்னிலை வகித்தாா். முகாமில் என்எல்சி மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று 73 குழந்தைகள் உள்பட 715 பேருக்கு சிகிச்சை அளித்தனா். பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. மருத்துவமனை பொது கண்காணிப்பாளா் சி.தாரிணி மவுலி, தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.