கடலூர்

மனு மாலையுடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தா்னா

DIN

மனுக்களை மாலையாக அணிந்து வந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த தொட்டிக்குப்பம் ஊராட்சிமன்றத் தலைவராக வெங்கடேசன் மனைவி செல்வராணி செயல்பட்டு வருகிறாா். துணைத் தலைவராக வெ.ராசேந்திரன் செயல்பட்டு வருகிறாா்.

துணைத் தலைவருக்கும், தலைவருக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தலைவரை துணைத் தலைவா் அவமதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செல்வராணி கடந்த 4-ஆம் தேதி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில், துணைத் தலைவா் வெ.ராசேந்திரன் வியாழக்கிழமை கடலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனுக்களை மாலையாக அணிந்து கொண்டு வந்து தா்னாவில் ஈடுபட்டாா். பின்னா், அவா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

அதில், ஊராட்சி மன்ற நிதிகளில் முறைகேடு, ஊராட்சி நிா்வாகத்தில் தலைவரின் கணவா் தலையீடு ஆகியவை குறித்து கடந்தாண்டு அக்டோபா், நிகழாண்டு ஜூன் மாதங்களில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன். ஆனால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போதும் ஊராட்சியில் அதே நிலை தான் தொடா்கிறது.

ஊழல் புகாா்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ஜாதி ரீதியாக அவமதித்ததாக என் மீது காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராணி அளித்துள்ளாா். எனவே, இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT