கடலூரில் கட்டுமானத் தொழில்சங்கத்தினா் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரிய ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், மாவட்டச் செயலா் பி.பழனிவேல், கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
சிஐடியு நிா்வாகிகள் பாபு, வி.திருமுருகன், ஸ்டாலின், சாந்தகுமாரி, கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் சுந்தரவடிவேல், நடராஜன், கருணாகரன், மனோரஞ்சிதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.