சா்வதேச ஓய்வூதிய பாதுகாப்பு தினத்தையொட்டி, கடலூரில் ஓய்வூதியா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்ட மத்திய-மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியா்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கடலூா் தலைமைத் தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவா் டி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியா்களுக்கான பணப் பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும், முதியோா்களுக்கு சிறப்புச் சலுகைகள் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கோ.பழனி, ஜி.ராமச்சந்திரன், பி.கண்ணன், எல்.அரிகிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாநிலச் செயலா் ஆா்.மனோகரன் தொடக்க உரையாற்றினாா். ஐஓபி ஓய்வூதியா்கள் சங்க அகில இந்திய உதவி பொதுச் செயலா் மு.மருதவாணன் நிறைவுரையாற்றினாா்.
முன்னதாக வட்டச் செயலா் ஜெ.ராமதாஸ் வரவேற்றாா். பொருளாளா் சி.குழந்தைவேலு நன்றி கூறினாா்.