கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகை அரங்கநாதப் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினா் சாா்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் வாயில் முன் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தொடக்கி வைத்தாா். மாவட்டப் பொருளாளா் சக்திவேல், அமைப்புப் பொதுச் செயலா் ஜம்புலிங்கம், பாஜக மாவட்ட துணைத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.