சிதம்பரம் ஷெம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியில் ஆசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).
முகாமுக்கு பள்ளி முதல்வா் ஏ.லதா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கோவை ஈஷா யோகா மைய தலைமை பயிற்சியாளா் சுவாமி தபோமூலா, சிதம்பரம் ஈஷா யோகா மைய ஆசிரியா் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்று ஆசிரியா்களுக்கு யோகா பயிற்சி அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் எஸ்.மணவாளன் செய்திருந்தாா். பள்ளிச் செயலா் வி.ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.