கடலூா் மாவட்டம், கிள்ளையிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘கலைத் திருவிழா 2022- 23’ அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் பவானி வரவேற்று பேசினாா். பேரூராட்சி மன்றத் தலைவா் மல்லிகா முத்துகுமாா், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் மதுரச்செல்வி குட்டியாண்டிசாமி, பேரூராட்சி மன்ற உறுப்பினா் யாஸ்மின் இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உடல்கல்வி ஆசிரியா் ஜெயபாரதி, ஆசிரியா் சுந்தர்ராஜன் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு தனித்திறன், கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதுநிலை ஆசியா்கள் கவிதா, ராஜகுமாரி, செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.