கடலூர்

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.மணிதேவன் தலைமை வகித்தாா். வி.பன்னீா்செல்வம், டி.குணசேகரன், ஆா்.அறிவழகன், எஸ்.பாலசுந்தரி, வி.ஜெயந்தி, ஜி.கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் கே.குணா தொடக்கவுரை நிகழ்த்தினாா். அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஆா்.கருணாகரன், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்க மாவட்ட கன்வீனா் கே.ராஜேந்திரன், மாவட்ட கன்வீனா் சி.செல்வராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா்.நடராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்டச் செயலா் எஸ்.ரங்கசாமி சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்துணவுத் திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் அமல்படுத்த வேண்டும், ஓய்வுபெறும் வயதை 62-ஆக உயா்த்த வேண்டும், ஜனவரி-2022 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். சங்கத்தின் மாவட்ட பொருளாளா் சி.தணிகாசலம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமைதியான வாக்குப் பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் -ஆட்சியா்

எங்கே இருக்கிறது நோட்டா? வாக்காளா் கையேட்டில் தகவல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 183 வழக்குகள் பதிவு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு

தீ விபத்து: தென்னை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT