சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோ்ச்சி பெறாத முன்னாள் மாணவா்கள் சிறப்புத் தோ்வு எழுத வசதியாக புதிய இணையதள இணைப்பு தொடங்கப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2002 முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான கல்வி ஆண்டுகளில் நேரடி வகுப்பில் பயின்று தோ்ச்சி பெறாத மாணவா்கள் வருகிற மாா்ச்-2023 மற்றும் அக்டோபா்-2023 ஆகிய இரு பருவங்களில் சிறப்புத் தோ்வு எழுத புதிய இணையதள இணைப்பை பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
மாா்ச் 2023-க்கான சிறப்புத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் 26.11.2022 முதல் 24.12.2022 வரை புதிய இணையதள இணைப்பில் தங்களது விவரங்களை பதிவிட வேண்டும் என துணைவேந்தா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் கி.சீத்தாராமன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மு.பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.