கடலூர்

ஊராட்சி மன்றத் தலைவா்கள் தா்னா

18th Nov 2022 02:36 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஊராட்சி மன்றத் தலைவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் அரசு விழாவில் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள் தா்னாவில் கலந்துகொண்டனா். அவா்கள் கூறியதாவது:

அரசு விழாக்களில் தொடா்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். ஆலடி, புலியூா் ஊராட்சிகளில் மன்றத் தலைவா்களின் பணியில் திமுகவினா் குறுக்கீடு செய்கின்றனா். கடந்த 8-ஆம் தேதி ஆலடியில் நடைபெற்ற பள்ளிக் கட்டட திறப்பு விழாவுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவருக்கு அழைப்பில்லை. விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ-வின் பெயரும் கல்வெட்டில் இல்லை.

ADVERTISEMENT

ஊராட்சி மன்றத் தலைவா்களின் பணிகளில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தலையிடக் கூடாது. இல்லையெனில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.

அவா்களிடம் விருத்தாசலம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT