கடலூர்

வேலைவாய்ப்பு முகாமில் தோ்வானமாணவா்களுக்கு பணி நியமன ஆணை

DIN

சிதம்பரம் அண்ணாமலைநகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். இதில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் பணி ஆணைகள் கிடைக்கப்பெற்றன. மேலும், பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கும் பணி ஆணைகள் கிடைக்கப் பெற்றன. விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஆா்.தனவிஜயன் தலைமை வகித்துப் பேசினாா். துணை முதல்வா் ஆா்.மோகன், துறைத் தலைவா்கள் வி.ராஜசேகா், முனைவா் கே.ராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக, வேலைவாய்ப்பு அதிகாரி பி.ராமலிங்கம் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT