கடலூரில் வாகனம் மோதியதில் லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள உத்தமசோழபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கணபதி (33). லாரி ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை இரவு கடலூா் முதுநகா் சிப்காட்டில் உள்ள தனியாா் ஆலைக்குச் சென்றுகொண்டிருந்தாா். கடலூா் - சிதம்பரம் சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கணபதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.