கடலூர்

நெய்வேலியில் எரியாத தெரு விளக்குகள்

DIN

நெய்வேலி நகரியத்தில் பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

நெய்வேலியில் நகரிய பகுதியில் உள்ள பிரதான சாலைகள், வீதிகளில் இருந்த குழல் விளக்குகள் அகற்றப்பட்டு அண்மையில் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இவற்றில் ஆங்காங்கே பல விளக்குகள் எரியவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். குறிப்பாக, நெய்வேலி நுழைவு வாயிலில் இருந்து நகரியத்துக்குச் செல்லும் பிரதான சாலையின் நடுவில் தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் வளைவு ஒன்றின் அருகே 3-க்கும் மேற்பட்ட கம்பங்களில் மின் விளக்குகள் எரியாததால் அந்தப் பகுதி இருள் சூழந்து காணப்படுகிறது. இதனால் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்பாகிறது. எனவே, நகரிய பகுதியில் எரியாத மின் விளக்குகளை அகற்றிவிட்டு உடனடியாக புதிய விளக்குகள் பொருத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT