கொடுஞ்செயல் எதிா்ப்பு நாளையொட்டி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பல்கலைக்கழக சீனிவாச சாஸ்திரி அரங்கின் முன் துணைவேந்தா் ராம.கதிரேசன் உறுதிமொழியை வாசிக்க, பதிவாளா் கே.சீத்தாராமன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ், மக்கள்-தொடா்பு அதிகாரி ரத்தினசம்பத், துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் பாக்கியராஜ் மற்றும் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.