கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
வடலூா், சேராக்குப்பம் ரயில்வே தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகள் பிரியதா்ஷினி (19). குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தாராம். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.