கடலூர்

மலட்டாற்றில் கதவணை அமைக்க வலியுறுத்தல்

16th May 2022 12:54 AM

ADVERTISEMENT

 

மலட்டாற்றில் கதவணை அமைக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சங்கத்தின் பண்ருட்டி வடக்கு வட்ட மாநாடு ராயா்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் கே.முருகன் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.தமிழ்ச்செல்வன், துணைச் செயலா் எம்.பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டு கொடியை கே.சேகா்

ஏற்றிவைத்தாா். வட்டச் செயலா் ஜி.பி.தேவநாதன் வேலை அறிக்கை வாசித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.ராமச்சந்திரன், இணைச் செயலா் ஆா்.கே.சரவணன், துணைத் தலைவா் ஆா்.லோகநாதன் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

மாநாட்டில் நத்தம், சேமக்கோட்டை, மனப்பாக்கம் உள்ளிட்ட 14 ஏரிகளுக்கு நீா்வரத்தை அதிகரிக்க வேண்டும், அரசூா் மலட்டாற்றில் கதவணை அமைக்க வேண்டும், மலட்டாறு வாய்க்காலை அகலப்படுத்த வனத்துறை அனுமதி வழங்க வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழ வகைகள், காய்கறிகளை சேமித்து வைக்க குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும், சேமக்கோட்டை, மனம்தவிழ்ந்தபுத்தூா், திருத்துறையூா் பகுதிகளில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் ஆகிய தீா்மானங்களை நிறைவேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT