கடலூர்

தொழிலாளி சடலமாக மீட்பு

16th May 2022 12:53 AM

ADVERTISEMENT

 

கடலூரில் கூலித் தொழிலாளி ஒருவா் ஓடையில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.

கடலூா் வண்டிப்பாளையம் அம்பேத் நகரைச் சோ்ந்தவா் நா.ராஜேந்திரன் (42). கூலித் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் திரும்பவில்லை. அவரை பல இடங்களிலும் தேடியும் காணவில்லையாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அங்குள்ள பெரிய வாய்க்கால் பாலம் கீழ் ஓடையில் சடலமாகக் கிடந்தாா். இவா் அதிக மதுபோதையால் மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT