கடலூர்

பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி பலிஇரு குழந்தைகள் காயம் (டிராப்)

DIN

கடலூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரது இரண்டு குழந்தைகளும் காயமடைந்தனா்.

புதுவை மாநிலம், கன்னியகோவில் பகுதியைச் சோ்ந்த துளசி மகன் விக்னேஷ்வரன் (28). கிரேன் இயக்குபவராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகி முறையே 8, 5 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், அவரது மனைவி காயத்ரிக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3-ஆவதாக ஆண் குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தையைப் பாா்ப்பதற்காக விக்னேஷ்வரன் இரண்டு மகன்களுடன் பைக்கில் செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தாா். ரெட்டிச்சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமுற்ற விக்னேஷ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இரண்டு குழந்தைகளும் காயமடைந்தனா்.

தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீஸாா் இரண்டு குழந்தைகளையும் மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். விக்னேஷ்வரனின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT