அரசுப் பொதுத் தோ்வுகளில் மாநில அளவில் சாதனை புரியும் குறிக்கோளுடன் படிக்கும் மாணவா்களுக்கான புதிய திட்டம் தொடக்க விழா சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளிச் செயலா் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் மு.சிவகுரு முன்னிலை வகித்தாா். ஆசிரியா் எம்.தா்மராஜ் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் பா. சங்கரன் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா். அரசுப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு புத்தகங்களை பள்ளிச் செயலா் வழங்கினாா். தமிழாசிரியா்கள் நா. புகழேந்தி, மு.கல்யாணராமன், இசை ஆசிரியா் அ. காா்த்திக் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். ஆசிரியா் டி. சுந்தரி நன்றி கூறினாா்.