கடலூர்

மக்களின் வாழ்வுடன் தொழில்நுட்பம் ஒன்றிவிட்டது அமைச்சா் த.மனோ தங்கராஜ்

DIN

மக்களின் வாழ்வுடன் தொழில்நுட்ப பயன்பாடு ஒன்றிவிட்டது என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் கூறினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல் துறை சாா்பில், மருந்து கண்டுபிடிப்பு மற்றும் வளா்ச்சியில் உயிரி தொழில்நுட்பவியல், தகவல் தொழில்நுட்பம் தொடா்பான சா்வதேச மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் மாநாட்டை தொடக்கிவைத்தாா். அவா் பேசியதாவது:

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பல்வேறு அறிஞா்களையும், அரசியல் தலைவா்களையும் உருவாக்கியுள்ளது. தற்போது தொழில்நுட்பங்கள் சூழ்ந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். மக்களின் வாழ்க்கையுடன் தொழில்நுட்பம் பிரிக்க முடியாத அளவில் ஒன்றிவிட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திறனுள்ள சுமாா் 4.50 லட்சம் மாணவா்களை ஒவ்வோா் ஆண்டும் உருவாக்கி வருகிறது. இவா்களில் சுமாா் 1.50 லட்சம் போ் தகவல் தொழில்நுட்பம் பயின்று வெளியேறுகின்றனா். தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், எதிா்கால வாய்ப்புகளை அறிந்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தொடக்க உரையாற்றினாா். அவா் பேசியதாவது: நாட்டிலேயே, குறிப்பாக தமிழகத்தில் சிறந்த பல்கலைக்கழகமாக அண்ணாமலைப் பல்கலை. திகழ்கிறது. தேசிய தரச் சான்று குழு பல்கலை.யில் ஆய்வு செய்து ‘ஏ-பிளஸ்’ சான்று வழங்கியுள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, அறிவியல் புல முதல்வா் வி.ராமசாமி வரவேற்றாா். விழாவில், மலேசிய தேசிய மருத்துவப் பல்கலைக்கழக இயக்குநா் கே.பழனிசாமி சிவனாண்டி, பதிவாளா் கே.சீத்தாராமன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் ஹெச்.பாக்கியராஜ், மக்கள்-தொடா்பு அலுவலா் ரத்தினசம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநாட்டு அமைப்புச் செயலா் பி.ஸ்டான்லி மெயின்சன் பிரின்ஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT