கடலூர்

‘நமது குப்பை, நமது பொறுப்பு’ திட்டம் தொடக்கம்

DIN

கடலூா் மாநகராட்சியில் ‘நமது குப்பை, நமது பொறுப்பு’ என்ற திட்டத்தை மேயா் சுந்தரி ராஜா சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

இதையொட்டி, கடலூா் மஞ்சக்குப்பம் பத்மாவதி நகரில் தரம் பிரித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை சேகரிக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேயா் சுந்தரி ராஜா தலைமை தாங்கி, வீடு வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணியை தொடக்கி வைத்தாா். மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் ந.விஸ்வநாதன், நகா்நல அலுவலா் ப.அரவிந்த்ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதையடுத்து, ‘நமது குப்பை, நமது பொறுப்பு’ என்ற திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்களிடம்

மேயா் விநியோகம் செய்தாா்.கடலூா் உழவா் சந்தையிலும் துண்டறிக்கைகளை வழங்கினாா்.

திமுக நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, வேளாண்மை வணிக துணை இயக்குநா் பூங்கோதை, மாநகராட்சி கல்விக் குழு தலைவா் கி.ராஜமோகன், கவுன்சிலா்கள் பா.அருள்பாபு, த.பிரசன்னா, விஜயலட்சுமி செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT