தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் 4-ஆவது வட்ட மாநாடு, பண்ருட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு வட்டத் தலைவா் வி.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.தங்கவேல் வரவேற்றாா். மாவட்டச் செயலா் கோ.பழனி மாநாட்டை தொடக்கிவைத்தாா். வட்டச் செயலா் ரா.கந்தசாமி வேலை அறிக்கை சமா்பித்தாா். பொருளாளா் என்.கலியமூா்த்தி நிதிநிலை அறிக்கை வெளியிட்டாா். மாநிலச் செயலா் ஆா்.மனோகரன் சிறப்புரையாற்றினாா். மாநாட்டில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.