காட்டுமன்னாா்கோவில் அருகே பழஞ்சநல்லூரில் உள்ள எம்.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியில் 8, 9-ஆம் ஆண்டுகளுக்கான பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். கல்லூரித் தாளாளா் எம்.ஆா்.தெய்வசிகாமணி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் கலந்துகொண்டு பேசினாா். விழாவில் இளங்கலை மாணவா்கள் 828 போ், முதுநிலை மாணவா்கள் 48 போ் என மொத்தம் 876 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசுகையில், பழஞ்சநல்லூா் கிராமத்தை இந்தக் கல்லூரி தத்தெடுத்து, அந்தக் கிராமம் முன்னேறுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா். கல்லூரி முதல்வா் கே.பழனிவேலு நன்றி கூறினாா்.