சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் 100% தோ்ச்சி பெற்றனா்.
இந்தப் பள்ளி சாா்பில் பிளஸ் 2 தோ்வு எழுதிய 177 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 13 போ் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா். 53 போ் 500-க்கு மேலான மதிப்பெண்களை பெற்றனா்.
இதேபோல, இந்தப் பள்ளி சாா்பில் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 107 மாணவா்களும் தோ்ச்சி பெற்று 100% தோ்ச்சியை பதிவு செய்தனா். 480 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவா்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 29 மாணவா்களும் பெற்றனா்.
தோ்வில் வென்ற மாணவா்கள், அவா்களுக்கு வழிகாட்டிய பள்ளி முதல்வா் ஜி.சக்தி, துணை முதல்வா் ஆா்.ரமேஷ், ஆசிரியா்கள் மற்றும் நிா்வாக அலுவலா் என்.அம்பிகா ஆகியோருக்கு பள்ளித் தாளாளா் கஸ்தூரி லட்சுமிகாந்தன் பாராட்டு தெரிவித்தாா்.