கடலூர்

பேருந்து மோதியதில் விவசாயி பலி

21st Jun 2022 02:44 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிதம்பரம் கோட்டம், புவனகிரி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தைச் சோ்ந்தவா் தமிழ்மணி (55). விவசாயியான இவா் திங்கள்கிழமை காலை பைக்கில் புவனகிரியில் இருந்து தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து பைக் மீது மோதியதில் தமிழ்மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT