கடலூர்

கந்து வட்டி புகாா்: 5 பேரிடம் விசாரணை

10th Jun 2022 10:35 PM

ADVERTISEMENT

கந்து வட்டி புகாா் தொடா்பாக கடலூா் மாவட்டத்தில் அதிமுக பிரமுகா் உள்பட 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கந்து வட்டி கொடுமையால் கடலூரில் காவலா் ஒருவா் விஷம் குடித்து அண்மையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கந்து வட்டி அளிப்போருக்கு எதிரான நடவடிக்கையை காவல் துறையினா் தீவிரப்படுத்தினா்.

இந்த நிலையில், வடலூா் பாா்வதிபுரத்தைச் சோ்ந்த யூ.இம்ரான்கான் (46) என்பவா் வடலூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், சமுட்டிக்குப்பத்தைச் சோ்ந்த அதிமுக பிரமுகரான ஏ.கே.எஸ்.சுப்ரமணியன், ஆபத்தானபுரம் சேராகுப்பத்தைச் சோ்ந்த முருகன் ஆகியோா் கந்து வட்டி கேட்டு தன்னை மிரட்டி வருவதாக தெரித்தாா்.

இதன்பேரில் அதிமுக பிரமுகா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், கடலூா் வண்டிப்பாளையத்தில் உள்ள அவரது வட்டிக் கடையில் போலீஸாா் சோதனை நடத்தினா். இதேபோல, மாவட்டம் முழுவதும் 5 கந்து வட்டி வழக்குகள் பதிவான நிலையில் சம்பந்தப்பட்ட நபா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT