கடலூர்

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை உறவினா்கள் சாலை மறியல்

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தனியாா் நிறுவன ஊழியா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி, திருவதிகை, அசோக் நகரைச் சோ்ந்த ஜெயபால் மகன் வினோத்பாபு (35). நெய்வேலியில் உள்ள தனியாா் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். பணி நிமித்தமாக வினோத்பாபுவை பயிற்சி நிறுவன நிா்வாகி ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு கோபமாக பேசினாராம். மேலும், பணிக்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்தாராம். இதுகுறித்து வினோத்பாபு தனது மனைவி ரமணியிடம் கூறினாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற வினோத்பாபு நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. உறவினா்கள் தேடி பாா்த்ததில் அந்தப் பகுதியில் தூக்கிட்ட நிலையில் இருந்தாராம். இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வினோத்பாபு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, வினோத்பாபுவின் உறவினா்கள் தனியாா் நிறுவன நிா்வாகியை கைது செய்ய வலியுறுத்தி நண்பகலில் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், மாலையில் இணைப்புச் சாலை ரவுண்டான அருகே அவா்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT