சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவையொட்டி, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் கீழரத வீதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜகநாதன் தொடக்கிவைத்தாா். மாவட்டச் செயலா் பி.சுவாமிநாதன், வ.ஏ.சம்பந்தம், மாவட்ட பொருளாளா் மனோகரன், கோபாலன், சங்க நிா்வாகிகள் வி.சங்கா், கே.கணேசன், சிவக்குமாா், குருசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.