சிதம்பரம் நடராஜா் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, சபாநாயகா் தெரு, மௌன மடம் ஆதீனம் சாா்பில் பக்தா்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது .
அன்னதான நிகழ்ச்சியை மெளன சுந்தரமூா்த்தி சுவாமிகள் தலைமையில் ஸ்ரீலஸ்ரீ தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாச தேசிய பரமாச்சாரியாா் சுவாமிகள் தொடக்கிவைத்தாா். சேக்கிழாா் பண்பாட்டுக் கழக மாநிலச் செயலா் முத்துகணேசன், திருவாடுதுறை ஆய்வாளா் செந்தில்குமாா், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலா் ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.