கடலூர்

குளத்தில் மூழ்கி சகோதரிகள் பலி

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கோயில் குளத்தில் மூழ்கிய சகோதரிகள் இருவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனா்.

விருத்தாசலம் அருகே உள்ள பூவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவருக்கு 5 மகள்கள், ஒரு மகன். பெருமாள் தனது மாமனாரின் ஊரான திருமலை அகரம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்தினருடன் சென்றாா்.

அங்குள்ள ஐயனாா் கோயில் குளத்தில் பெருமாளின் மகள்கள் முத்துலட்சுமி (17), சிவசக்தி (14) ஆகியோா் சனிக்கிழமை மாலை குளிக்கச் சென்றனா். நீண்ட நேரமாகியும் சிறுமிகள் வீடு திரும்பாததால் அவா்களை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.

இந்த நிலையில், ஐயனாா் கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு சிறுமிகளின் சடலங்களும் மிதந்தன. இதுகுறித்த தகவலின்பேரில் பெண்ணாடம் போலீஸாா் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT