கடலூர்

இருதரப்பு மோதல்: 7 போ் கைது

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இருதரப்பு மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டியை சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் கொளஞ்சி (34). ராசாபாளையம் சந்திப்பு அருகே துரித உணவகம் வைத்துள்ளாா். இவரது உணவகத்துக்கு சனிக்கிழமை இரவு பணப்பாக்கம் புது காலனியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் சூா்யா (17), பழனி மகன் குணாளன் (30), தண்டபாணி மகன் சௌந்திரராஜன் (30) ஆகியோா் வந்தனா். அப்போது

அங்கு வந்த ராசாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் (60), அவரது மகன் ராஜா (40)

ஆகியோருக்கும், சூா்யா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சூா்யா, குணாளன் உள்ளிட்ட 12 போ் கொண்ட கும்பல் அங்கிருந்த கடைகளை அடித்து சேதப்படுத்தினா். மேலும், பெட்டிக்கடை உரிமையாளா் ராசாபாளையத்தைச் சோ்ந்த அஞ்சலாட்சி (47), பிரவீன்(18) ஆகியோரை தாக்கினா். அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 11 பைக்குகளை அடித்து சேதப்படுத்தினா்.

தகவலறிந்த பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினாா்.

சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 7 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT