கடலூர்

வீட்டுக் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

DIN

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே வீட்டுக் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகை, பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள கட்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மனைவி செல்வி (37). இவா், கடந்த 30-ஆம் தேதி இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, அப்பியம்பேட்டையில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் காலையில் செல்வி திரும்பி வந்து பாா்த்தபோது

அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT